என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வெள்ளி, 6 ஜூலை, 2012

விழிகளில் எம்மை சுமந்தவர்தனை இன்று தெருவோரத்தில் கையேந்த விடலாமா....???

நமது மண்ணில் ... தெருவோரம் 
அழகுதருவது 
எது தெரியுமா ...!
அன்பு என்னும் ஒரு வட்ட வாழ்வில் குடும்பம் என்னும் கோவில் கட்டி மழலை சுமந்து 
காத்த எம் தேசத்தின் பெற்றோர் என்னும் அகராதிகளே ...!
உன் பிள்ளை உன்னை தெரிவில் விட்டாலும்
என் பிள்ளை உனக்கு தருவான் தண்ணீர் அது உன் உயிர் காக்கும் ...! இது ஒரு பெற்றோரின்
புலம்பல் அல்ல மனித நேயம் ....!





மண்ணில் நீ வாழ்கிறாய் உன் வாழ்கையில்
உன் பெற்றோரும் வாழ்கின்றனர் ...
வறுமை துன்பம் துயரம் எதுவாக நீ சுமந்தாலும்
உன் விழிகளாய் நேசி உன் பெற்றோரை ...

மானிடம் வாழ சிலுவை சுமந்த கர்த்தரை
பார் ...பாரினில் அவர் கடவுள்
உன்னை சுமந்து வளர்த்த உன் பெற்றோருக்காய்
சுமக்க சிலுவையை தயங்காதே ....
அப்படி நீ சுமந்தால் மானிடா
நீ இருப்பாய் கடவுளுக்கே கடவுளாய் ...'

கருணை அன்பு பாசம் நேசம்
இது எல்லாம் வார்த்தைகளின் அர்த்தங்கள் அல்ல.... அவை எம் தாய் , தந்தை என்னும்
வடிவங்களின் அர்த்தங்களை சுமக்கும்
மொழியின் கரு ...!

உன்னை ஆயிரம் உறவுகள் நண்பர்கள்
நேசித்தாலும் .........நேசிக்காவிடாலும் ....
தனிமையில் ஒரு நாள் ஒரு துளி கண்ணீர்
உன் விழிகளில் இருந்து .....
அப்போ பாரு ....
அணைக்க இரு கரம் தாயாய் ...
ஆறுதலுக்கு இரு கரம் தந்தாய் ...'

உன் பெற்றோர் என்னும் உறவுக்கு
அர்த்தம் அழகாய் கூற உன்னை விட அகராதியால் கூட முடியாது ...!

சில வேளை நாம் சிந்திக்க தவறுகிறோம்
தவறுவதால் மிருகங்களாய் இருக்குறோம் ...!
என் வீட்டு மின்சாரம் எனக்கு வெளிச்சம்
தரும் ...
ஆனால் என் வாழ்வில்
வெளிச்சம் தந்த உறவுகள் இரண்டும் (உணர்வுகள் ) தெருவோர வெளிச்சத்தில் ...

தாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக