என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

திங்கள், 30 ஜூலை, 2012

உனது ஜீவனின் ஜீவன் நான் ..!

நியாங்களில் தூங்கும் 
உண்மையாய் 
உண்மையாய் என்னுள் இருந்தவள் ..!
உறவு தெரியாது உயிராய் வாழ்ந்தவள் ..!
மலரின் உதடுகள் காலை பனித்துளி 
சுமப்பதால் பூக்களுக்கு வலியில்லை ..!
என் கண்கள் சுமந்தது கண்ணீர் 
இதயம் சுமந்தது வலிகள் ..!
இருந்தும் புன்னகைத்தது என் உதடுகள்
உன் உன் அன்பின் அரவணைப்பு 
எனக்கு தாயாய் இருந்ததால் ..!


இருந்தும் வலியது கண்களில் 
இன்று உன் முகம் காணாது ..!
பிரிவு இது நிரந்தரம் ஆனால் 
என் உயிர் அது நிரந்தரம் ஆகும் 
கல்லறை தனில் ..!


விழிகள் அணைத்த உன் புன்னகை 
தொடருமா மீண்டும்..!
தெரு வோர மின் விளக்கு 
காத்திருக்கும் இரவுக்காய் 
தாங்கள் புன்னகைக்க ..!
என் விழியது தூங்காது 
துயரத்தில் உன் விழி காண ..!
கனவாய் அல்ல நியமாய் வா 
நான் நியமாய் வாழ 


தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக