என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 5 ஜூலை, 2012

காதலித்து பார் .......!!!



வானம் தொட்டு -பூமி வரை
அவள் புன்னகைகள் விம்பங்களாய்
கானம் இசைக்கும் குயிலின்
குரலாய் அவள் குரல் ...!

மழையும் குளிரும் ஒன்றாய் ...
முன்னே வந்தால் அவள்
பின்னே போகும் உன்
இதயத்தின் துடிப்பு ..!

அவள் கண்கள் உன்னை நோக்கும்
துடிக்கும் இதயம் இடைவெளி தரும்
தரும் இடைவெளியில் அவளின் இதயம்
உனக்காய் துடிப்பதாய் உணர்வாய் ..!

கோவில் வீதியில் தேர் வலம் வரும் ..
அதனை அவள் வலம் வர ...
உன்னுள் அவள் தேவதையாய் ....
ஏன் நினைவுகளாகவும் அவளே ..!

உன் விரல்கள் விரல்களி
ல்  கவி வரையும் 
ஓவியம் ஓன்று கால்களினால் தரையிலே ...
அவள் பார்க்கும் ஓரக்கண் பார்வை உன்னில்
உன்னில் உனக்குள் தெரிந்தால்...!

தனிமையில் பேசுவாய் தென்றலில் அது கவியாய் ...!
வெற்று தாள்களில் வெற்றிடம் பஞ்சமாகும் ..
பஞ்சு மெத்தை தூக்கம் மறப்பாய் ..!
மறப்பாய் உன்னையே- நினைப்பாய்
அவள் கண்களின் மொழியையே ...!

சற்று திரும்பும் வினாடிகளில் அவள்
வதனம் தேடுவாய் ....
இல்லாவிடாலும் இருப்பதாய் உணர்வாய்...
உணர்விலே கலந்தவள் உணர்வாகவே
இருப்பாள் உன்னில்....!

By தாஸ்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக