என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

திங்கள், 17 செப்டம்பர், 2012

பிறக்கும் போது
மலர்களுடன் வாசமும்
வருவது போல ..!
ஒவொரு மாநிடபிறப்பின்
அத்தியாயத்திலும்
நட்பின் பிறப்பும் கருக்கொள்ள
...
தவறுவதில்லை .!

தாஸ்

உன்னை காணாமல் ..!

நிலவின் பிரிவால்
கண்ணீரை சுமக்கும்
மேகங்களாய் நான்
இங்கே ..!
உன்னை காணாமல் ..!

தாஸ்

இதயம்

உண்மையாக நேசித்த
ஒருவரின் மௌனம்
உனக்காக இருந்தாலும்
இதயம் வலிகளை சுமக்க
தவறுவதில்லை !

தாஸ்

உன் நினைவுகள் ..!

நீ பிரிந்து போன
பின்பும் ...
பிரியாமல் இருக்கிறது
உன் நினைவுகள் ..!
அதுவே எனக்கு
...
சுகமானது தான்!

தாஸ்

வியாழன், 13 செப்டம்பர், 2012

கல்லறை

தினமும் ஒரு
முத்தம் எனக்கு.!
தினமும் ஒரு வார்த்தை
என் பெயர் .
அருகில் இருப்பாள்
இருந்து மலர் வைத்து
அழகு பார்ப்பாள் என்னை.
இத்தனையும் என் கல்லறைக்கே ..!
Thas
நீ என் குழந்தை

வலிகள் எத்தனை
நீ தந்தாலும் ..!
பிரிவுகள் விரும்பாது
உன்னுடன் இருக்கிறேனே ..!
காதலி நீ என்
குழந்தையாய் இருப்பதாலடி ..'
Thas
விலக முடியவில்லை,,,!!

நான் எப்படி உன்னை
விட்டு விலக
முடியவில்லையோ ..!
அப்படியே நீயும்
நினைத்தால் ..
அப்போதே நீயும்
கடவுளாவாய் எனக்கு !
Thas
அழுது கொண்டிருக்கிறேன்


 அதிகமாக உன்னை
நேசித்தேன் ..!
அதனால் அதிகமாக
அழுது கொண்டிருக்கிறேன்
உன்னை பிரிந்ததால் ..!
Thas

நம்பிக்கை

காதலித்தாய்
காத்திருக்கிறேன்
பேசிக்கொண்டே
கண்ணீருடன் ஒரு
வார்த்தை நீ பேசுவாய்
என்ற நம்பிக்கையில்
உன் கல்லறையில் ..
Thas